dailyvideo


ஸூரத்துல் வாகிஆ Surat Al-Wāqi`ah (The Inevitable) - سورة الواقعة


ஸூரத்துல் வாகிஆ (மாபெரும் நிகழ்ச்சி)
மக்கீ, வசனங்கள்: 96

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
56:1    إِذَا وَقَعَتِ الْوَاقِعَةُ
56:1மாபெரும் நிகழ்ச்சி(யான இறுதிநாள்) ஏற்பட்டால் -
56:2   لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ
56:2அந்நிகழ்ச்சியைப் பொய்யாக்குவது எதுவுமில்லை.
56:3   خَافِضَةٌ رَّافِعَةٌ
56:3அது (தீயோரைத்) தாழ்த்தி விடும்; (நல்லோரை) உயர்த்தி விடும்.
56:4   إِذَا رُجَّتِ الْأَرْضُ رَجًّا
56:4பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது.
56:5   وَبُسَّتِ الْجِبَالُ بَسًّا
56:5இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது,
56:6   فَكَانَتْ هَبَاءً مُّنبَثًّا
56:6பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.
56:7   وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثَةً
56:7(அப்போது) நீங்களும் மூன்று பிரிவினர்களாகி விடுவீர்கள்.
56:8   فَأَصْحَابُ الْمَيْمَنَةِ مَا أَصْحَابُ الْمَيْمَنَةِ
56:8(முதலாமவர்) வலது பாரிசத்திலுள்ளோர் - வலது பாரிசத்துக்காரர் யார்? (என்பதை அறிவீர்களா?)
56:9   وَأَصْحَابُ الْمَشْأَمَةِ مَا أَصْحَابُ الْمَشْأَمَةِ
56:9(இரண்டாமவர்) இடது பாரிசத்திலுள்ளோர் - இடது பாரிசத்திலுள்ளோர் யார்? (என அறிவீர்களா?)
56:10   وَالسَّابِقُونَ السَّابِقُونَ
56:10(மூன்றாமவர் நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே யாவார்கள்.
56:11   أُولَٰئِكَ الْمُقَرَّبُونَ
56:11இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
56:12   فِي جَنَّاتِ النَّعِيمِ
56:12இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர்.
56:13   ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
56:13முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்,
56:14   وَقَلِيلٌ مِّنَ الْآخِرِينَ
56:14பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும் -
56:15   عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ
56:15(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில்களின் மீது -
56:16   مُّتَّكِئِينَ عَلَيْهَا مُتَقَابِلِينَ
56:16ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள்.
56:17   يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُونَ
56:17நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள்.
56:18   بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ
56:18தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்).
56:19   لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ
56:19(அப்பானங்களைப் பருகும்) அவர்கள் அவற்றினால் தலை நோய்க்காளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள்.
56:20   وَفَاكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ
56:20இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி வகைகளையும் -
56:21   وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ
56:21விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).
56:22   وَحُورٌ عِينٌ
56:22(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
56:23   كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ
56:23மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).
56:24   جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
56:24(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலியாகும்.
56:25   لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا
56:25அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்குவதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள்.
56:26   إِلَّا قِيلًا سَلَامًا سَلَامًا
56:26“ஸலாம், ஸலாம்” என்னும் சொல்லையே (செவியுறுவார்கள்).
56:27   وَأَصْحَابُ الْيَمِينِ مَا أَصْحَابُ الْيَمِينِ
56:27இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?)
56:28   فِي سِدْرٍ مَّخْضُودٍ
56:28(அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்;
56:29   وَطَلْحٍ مَّنضُودٍ
56:29(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும்;
56:30   وَظِلٍّ مَّمْدُودٍ
56:30இன்னும், நீண்ட நிழலிலும்,
56:31   وَمَاءٍ مَّسْكُوبٍ
56:31(சதா) ஒலித்தோடிக் கொண்டிருக்கும் நீரின் அருகிலும்,
56:32   وَفَاكِهَةٍ كَثِيرَةٍ
56:32ஏராளமான கனிவகைகளின் மத்தியிலும் -
56:33   لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ
56:33அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்) தடுக்கப்படாதவை -
56:34   وَفُرُشٍ مَّرْفُوعَةٍ
56:34மேலும், உன்னதமான விரிப்புகளில் (அமர்ந்திருப்பர்).
56:35   إِنَّا أَنشَأْنَاهُنَّ إِنشَاءً
56:35நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி;
56:36   فَجَعَلْنَاهُنَّ أَبْكَارًا
56:36அப்பெண்களைக் கன்னிகளாகவும்;
56:37   عُرُبًا أَتْرَابًا
56:37(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும்,
56:38   لِّأَصْحَابِ الْيَمِينِ
56:38வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).  
56:39   ثُلَّةٌ مِّنَ الْأَوَّلِينَ
56:39முன்னுள்ளோரில் ஒரு கூட்டமும்,
56:40   وَثُلَّةٌ مِّنَ الْآخِرِينَ
56:40பின்னுள்ளோரில் ஒரு கூட்டமும் (வலப்புறத்தோராக இருப்பார்கள்).
56:41   وَأَصْحَابُ الشِّمَالِ مَا أَصْحَابُ الشِّمَالِ
56:41இடது பாரிசத்திலுள்ளவர்களோ இடது பாரிசத்திலுள்ளவர்கள் யார்? (என்று அறிவீர்களா?)
56:42   فِي سَمُومٍ وَحَمِيمٍ
56:42(அவர்கள்) கொடிய அனல் காற்றிலும், கொதிக்கும் நீரிலும் -
56:43   وَظِلٍّ مِّن يَحْمُومٍ
56:43அடர்ந்து இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.
56:44   لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ
56:44(அங்கு) குளிர்ச்சியுமில்லை; நலமுமில்லை.
56:45   إِنَّهُمْ كَانُوا قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ
56:45நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் (உலகத்தில்) சுகபோகிகளாக இருந்தனர்.
56:46   وَكَانُوا يُصِرُّونَ عَلَى الْحِنثِ الْعَظِيمِ
56:46ஆனால், அவர்கள் பெரும் பாவத்தின் மீது நிலைத்தும் இருந்தனர்.
56:47   وَكَانُوا يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ
56:47மேலும், அவர்கள்: “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
56:48   أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ
56:48“அல்லது, முன்னோர்களான நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?” என்றும் கூறினர்.)
56:49   قُلْ إِنَّ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ
56:49(நபியே!) நீர் கூறும்: “(நிச்சயமாக உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
56:50   لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَاتِ يَوْمٍ مَّعْلُومٍ
56:50“குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் (நீங்கள் யாவரும்) ஒன்று கூட்டப்படுவீர்கள்.
56:51   ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا الضَّالُّونَ الْمُكَذِّبُونَ
56:51அதற்குப் பின்னர்: “பொய்யர்களாகிய வழி கேடர்களே! நிச்சயமாக நீங்கள்,
56:52   لَآكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
56:52ஜக்கூம் (என்னும் கள்ளி) மரத்திலிருந்தே நீங்கள் புசிப்பவர்கள்.
56:53   فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
56:53ஆகவே, “அதைக் கொண்டே வயிறுகளை நிறப்புவீர்கள்.
56:54   فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ
56:54அப்புறம் அதன்மேல் கொதிக்கும் நீரையே குடிப்பீர்கள்.
56:55   فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ
56:55“பின்னும் ஹீம் - தாகமுள்ள ஒட்டகை குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்.”
56:56   هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ
56:56இதுதான் நியாயத் தீர்ப்பு நாளில் அவர்களுக்கு விருந்தாகும்.
56:57   نَحْنُ خَلَقْنَاكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
56:57நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
56:58   أَفَرَأَيْتُم مَّا تُمْنُونَ
56:58(கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
56:59   أَأَنتُمْ تَخْلُقُونَهُ أَمْ نَحْنُ الْخَالِقُونَ
56:59அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
56:60   نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ الْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
56:60உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
56:61   عَلَىٰ أَن نُّبَدِّلَ أَمْثَالَكُمْ وَنُنشِئَكُمْ فِي مَا لَا تَعْلَمُونَ
56:61(அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
56:62   وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْأَةَ الْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ
56:62முதல் முறையாக (நாம் உங்களைப்) படைத்தது பற்றி நிச்சயமாக நீங்கள் அறிவீர்கள் - எனவே (அதிலிருந்து நினைவு கூர்ந்து) நீங்கள் உணர்வு பெற வேண்டாமா?
56:63   أَفَرَأَيْتُم مَّا تَحْرُثُونَ
56:63(இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
56:64   أَأَنتُمْ تَزْرَعُونَهُ أَمْ نَحْنُ الزَّارِعُونَ
56:64அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
56:65   لَوْ نَشَاءُ لَجَعَلْنَاهُ حُطَامًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
56:65நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் - அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
56:66   إِنَّا لَمُغْرَمُونَ
56:66“நிச்சயமாக நாம் கடன் பட்டவர்களாகி விட்டோம்.
56:67   بَلْ نَحْنُ مَحْرُومُونَ
56:67“மேலும், (பயிர்களிலிருந்து எதுவும் பெற முடியாதவர்களாகத்) தடுக்கப்பட்டு விட்டோம்” (என்றும் கூறிக் கொண்டிருப்பீர்கள்).
56:68   أَفَرَأَيْتُمُ الْمَاءَ الَّذِي تَشْرَبُونَ
56:68அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
56:69   أَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ الْمُزْنِ أَمْ نَحْنُ الْمُنزِلُونَ
56:69மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
56:70   لَوْ نَشَاءُ جَعَلْنَاهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
56:70நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
56:71   أَفَرَأَيْتُمُ النَّارَ الَّتِي تُورُونَ
56:71நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
56:72   أَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَا أَمْ نَحْنُ الْمُنشِئُونَ
56:72அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?
56:73   نَحْنُ جَعَلْنَاهَا تَذْكِرَةً وَمَتَاعًا لِّلْمُقْوِينَ
56:73நாம் அதனை நினைவூட்டுதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
56:74   فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
56:74ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
56:75   فَلَا أُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ
56:75நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
56:76   وَإِنَّهُ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ
56:76நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும்.
56:77   إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ
56:77நிச்சயமாக, இது மிகவும் கண்ணியமும் சங்கையும் மிக்க குர்ஆன் ஆகும்.
56:78   فِي كِتَابٍ مَّكْنُونٍ
56:78பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது.
56:79   لَّا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ
56:79தூய்மையானவர்களைத் தவிர (வேறெவரும்) இதனைத் தொட மாட்டார்கள்.
56:80   تَنزِيلٌ مِّن رَّبِّ الْعَالَمِينَ
56:80அகிலத்தாரின் இறைவனால் இது இறக்கியருளப்பட்டது.
56:81   أَفَبِهَٰذَا الْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ
56:81அவ்வாறிருந்தும், (குர்ஆனின் மகத்தான) இச்செய்தி பற்றி நீங்கள் அலட்சியமாக இருக்கிறீர்களா?
56:82   وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ
56:82நீங்கள் பொய்ப்பிப்பதை (இறைவன் தந்த) உங்கள் பாக்கியங்களுக்கு (நன்றியாக) ஆக்குகின்றீர்களா?
56:83   فَلَوْلَا إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ
56:83மரணத் தறுவாயில் ஒருவனின் (உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -
56:84   وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ
56:84அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
56:85   وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَٰكِن لَّا تُبْصِرُونَ
56:85ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
56:86   فَلَوْلَا إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ
56:86எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -
56:87   تَرْجِعُونَهَا إِن كُنتُمْ صَادِقِينَ
56:87நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை) மீளவைத்திருக்கலாமே!
56:88   فَأَمَّا إِن كَانَ مِنَ الْمُقَرَّبِينَ
56:88(இறந்தவர் இறைவனுக்கு) நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.
56:89   فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ
56:89அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.
56:90   وَأَمَّا إِن كَانَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
56:90அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,
56:91   فَسَلَامٌ لَّكَ مِنْ أَصْحَابِ الْيَمِينِ
56:91“வலப்புறத்தோரே! உங்களுக்கு “ஸலாம்” உண்டாவதாக” (என்று கூறப்படும்).
56:92   وَأَمَّا إِن كَانَ مِنَ الْمُكَذِّبِينَ الضَّالِّينَ
56:92ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்
56:93   فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ
56:93கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.
56:94   وَتَصْلِيَةُ جَحِيمٍ
56:94நரக நெருப்பில் தள்ளப்படுவது (விருந்தாகும்).
56:95   إِنَّ هَٰذَا لَهُوَ حَقُّ الْيَقِينِ
56:95நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.
56:96   فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
56:96எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505