இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள்

ஏன் இஸ்லாம்?

ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின...

09 Sep 2012 | undefined comments | Read more

முன்னாள் பெந்தகொஸ்தே மினிஸ்டர் கென்னத் L.ஜெர்கின்ஸ்

முன்னுரை: - ஒரு முன்னாள் மினிஸ்டர் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் இருள்களில் நடந்து செல்பவர்களை வெள...

06 Aug 2012 | undefined comments | Read more
தொழுகை

"ஸகாத்தின் முக்கியத்துவம்"

   ஸகாத்தின் பொருள் இதன் பொருள் தூய்மையுறச் செய்தல் என்பதாகும். ஒருவன் தன் உடைமைகளிலிருந்து நாற்பதில் ஒருபகுதியை எடுத்து ஏழ...

16 Sep 2012 | 0 comments| Read more

அமல்கள்

மனிதர்களும் ஜின்களும் படைக்கப்பட்டிருப்பதன் நோக்கம் அல்லாஹ்வை வணங்கவேண்டும் என்பதற்காகத் தானே தவிர வேறில்லை! அல்லாஹ் தன்னுடைய திருமறை...

07 Jul 2012 | 0 comments| Read more

துவக்குவோம்!

நாம் கேட்காமலே அருளப்பட்ட இந்த வாழ்க்கைக்காக, ஒரு உண்மையான முஃமின் இறைவனுக்கு நன்றி செலுத்துபவராக மட்டுமில்லாமல், இறைவனும் அவனுடைய தூத...

07 Jul 2012 | 0 comments| Read more

மிகப்பெரிய பாவம்!

“நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103) ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்...

07 Jul 2012 | 0 comments| Read more

who is god

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை

அடிப்படை விளக்கம் அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும் என்பதின் விளக்கம் என்னவென்றால் அல்லாஹ் தன்னைக் குறித்து அல்குர்ஆனில் கூறியிருக்கு...

16 Sep 2012 | 0 comments| Read more

அல்லாஹ் என்றால் யாருங்க?

(அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்) அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன் நீங்கள் அல...

01 Aug 2012 | 0 comments| Read more

நம்பிக்கை இழக்காதீர்கள்!

மனிதர்கள் பெரும்பாலும் பாவங்களைச் செய்ய விரும்பாதவர்களாக, பாவத்தில் ஈடுபட்டாலும் பாவம் என்று அறிந்த நிலையில் அதை செய்தவர்களாக, செய்பவர...

29 Jul 2012 | 0 comments| Read more

மனிதனுக்கேற்ற மார்க்கம்

இன்று உலகில் 180 கோடிக்கும் அதிகமான மக்களால் இஸ்லாம் மார்க்கம் பின்பற்றப்படுகின்றது. இஸ்லாம் மார்க்கம் எந்த வகையில் ஏனைய மதங்களிலிரு...

29 Jul 2012 | 0 comments| Read more
தஜ்ஜால்

Dajjal Arrivals

தஜ்ஜாலிஸத்தை வெற்றி கொள்வோம். அன்பின் சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தஜ்ஜால்! இவனுக்கு என்ன பெரிய முக்கியத்துவம்? ஏன் இ...

07 Jul 2012 | 0 comments| Read more
இணைவைத்தல்

இறைவனுக்கு உள்ள இலக்கணம்!

மதங்கள் என்பது இறை நம்பிக்கையை மையமாக வைத்தே தோற்றம் பெற்றுள்ளது. இன்று உலகில் கடவுள் நம்பிக்கையற்ற ஒரு மதத்தையேனும் காணமுடியவில்லை. ...

28 Jul 2012 | Read more
திருக்குர்ஆன்

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு 6

குர்ஆனை முடிக்கும் துஆ தற்காலத்தில் குர்ஆனை முடிக்கின்ற பிரார்த்தனை என்று ஒரு நீண்ட பிரார்த்தனையையும் குர்ஆனின் இறுதியில் எழுதி வைத்த...

08 Jul 2012 | Read more
நபிமார்கள்

சுலைமான் நபி வரலாறு

சுலைமான்(سليمان) நபி [தாவூது நபியின்] மகனாவார்கள். அவர்கள் இறைவனிடம் ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அது 'எவரும் அடைய முடியாத ஓர் அரசாங்கத...

30 Jul 2012 | Read more
மறுமை

கியாமத்[இறுதி தீர்ப்பு] நாள்

(FINAL JUDGEMENT DAY) ஒரு நாள் நாம் மலைகளை பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம...

30 Jul 2012 | Read more
நபி தோழர்கள்

அன்னை ஆயிஷா (ரழி)

அன்னையின் சிறப்புகள் : இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆருயிர்த் தோழரும், அருமை நண்பருமான அபுபக்கர் (ரழி) அவர்களின் செல்வப் புதல்வி தான் அன...

07 Jul 2012 | Read more
அனாச்சாரங்கள்

அன்றும், இன்றும்

அன்றைய அறியாமை காலத்தில் 360 சிலைகள் நிரம்பிய கஃபாவில், முஆவியா கோத்திரத்தார் கொடுத்த ஹுபைல் சிலையே பிரதானமானது. அடுத்து குறைஷியரின் பெ...

08 Jul 2012 | Read more
இஸ்லாம் பற்றி

இஸ்லாத்தை பற்றி ஜார்ஜ் பெர்னார்ட் ஷா

இஸ்லாத்தை பற்றி பிறமத அறிஞர்கள்! ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கூறுகிறார்:"நான் இஸ்லாத்தை மிக உயர்ந்த நிலையில் மதிக்கிறேன். ஏனெனில் இஸ்லா...

07 Aug 2012 | Read more
கலைச்சொற்கள்

கலைச்சொற்கள்

இணை கற்பித்தல்அகில உலகையும் படைத்து, காத்து, பராமரிக்கும் ஒரே ஒரு இறைவனை அல்லாஹ் என்று இஸ்லாம் கூறுகிறது. “அல்லாஹ்வுக்கு நிகராக எவரும்...

06 Aug 2012 | Read more

dailyvideo


மனிதனுக்கேற்ற மார்க்கம்



ன்று உலகில் 180 கோடிக்கும் அதிகமான மக்களால் இஸ்லாம் மார்க்கம் பின்பற்றப்படுகின்றது. இஸ்லாம் மார்க்கம் எந்த வகையில் ஏனைய மதங்களிலிருந்து வேறுபட்டிருக்கின்றது? இஸ்லாம் என்றால் என்ன? அதன் அடிப்படைக் கொள்கை என்ன? என்பனவற்றையெல்லாம் அறிந்துகொள்ள நாம் கடமைப் பட்டுள்ளோம்.

இஸ்லாம் இரு அடிப்படைகளை உலகத்திற்குச் சொல்கிறது.

1. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை.

2. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய திருத் தூதராவார்கள்.

ஒருவன், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பிக்கை கொள்ளும்போது, அவனிடம் மொழியால், இனத்தால், நிறத்தால், தேசத்தால் இருந்த பிளவுகள், கோத்திரத்தின், குலத்தின் அடிப்படையில் அவன் ஏற்படுத்திக்கொண்ட பிளவுகள் எல்லாமே இந்த ஓரிறைக் கொள்கையால் அடிபட்டுப் போகின்றன.

இவ்விரு கொள்கைகள்தான் இஸ்லாத்தின் அடிப்படைகளாகும். ஒருவன் இவற்றை நம்புகின்ற காரணத்தினால் ஏனைய மார்க்கங்களில் இருந்து தனித்தவனாக, வித்தியாசமான ஒரு கொள்கையை ஏற்றுக் கொண்டவனாக மாறுகின்றான். அந்தக் கொள்கையை ஏற்றுக் கொண்டவனுடைய வாழ்க்கையிலே ஏராளமான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இது போக, இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இன்று உலகத்தில் உள்ள எல்லா மதங்களையும், மார்க்கங்களையும் எடுத்துப் பார்த்தால் ஏதோ ஒரு வகையில் அங்கு பல தெய்வ வணக்கம் குடி கொண்டிருப்பதைப் பார்க்கலாம். பல தெய்வ வணக்கம் என்பது பல தெய்வங்களை வணங்குவது மட்டுமல்ல, உயிரோடுள்ளவர்களை வணங்குவது, இறந்தவர்களை வணங்குவது, பொருட்களை வணங்குவது போன்ற அனைத்துமாகும். இப்படி எல்லாம் நடப்பதை இன்றைய அறிவியல் உலகிற் பார்க்கிறோம்.



தெளிவாகவே பல கடவுட் கொள்கையைப் பிரகடனம் செய்யும் மார்க்கங்களையும் பார்க்கிறோம். படைப்பதற்கு ஒருவன், காப்பதற்கு ஒருவன், அழிப்பதற்கு ஒருவன், வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஒருவன் என்றெல்லாம் கடவுளைக் கூறு போடக்கூடிய மார்க்கங்களையும் மதங்களையும் நாம் உலகில் காண்கிறோம்.

ஆனால், இஸ்லாம் இவற்றிற்கெல்லாம் முற்றிலும் மாறுபட்டு அடிப்படையிலே மொத்த உலகத்திற்கும் கடவுள் ஒருவன்தான் என்றும் எல்லா மக்களுக்கும் ஒரே கடவுள்தான் இருக்க முடியும் என்றும், பல கடவுளர் இருக்க முடியாதென்றும் சொல்லித் தருகின்றது. அல்லாஹ் கூறுகிறான், இந்த உலகத்திலே ஒரு கடவுளைத் தவிர இன்னும் கொஞ்சம் கடவுளர் இருந்தால், இந்த உலகம் என்றைக்கோ சீர் கெட்டுப் போயிருக்கும்.

இத்தகைய வேறுபாடுகள் ஒழிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? எப்படி இந்த வேறுபாடுகள் ஒழியும்? இத்தகைய வேறுபாடுகள் ஒழிவதற்காக உலகத்தில் இதுவரை தீட்டப்பட்டு வந்துள்ள திட்டங்கள் வெற்றி அடைந்திருக்கின்றனவா எனில் நிச்சயமாக இல்லை. இத்தகைய வேறுபாடுகள் ஒழிய வேண்டுமானால் மனிதன் தான் கடவுளுக்கு அடிமை என்பதை முதலில் உணரவும் ஒப்புக் கொள்ளவும் வேண்டும். அடிமை என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒருவன், தான் இன்னொருவனைவிடச் சிறந்தவன் என்று சொல்ல மாட்டான், சொல்லவும் முடியாது. எனவே, மக்களனைவரும் சமமானவர்கள் என்ற எண்ணத்தை இந்தக் கொள்கைப் பிரகடனம் ஏற்படுத்துகின்றது. இதைத்தான் அல்-குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது,

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَى

'மனிதர்களே, நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம்' (அல்ஹுஜுராத்: 13).

கடவுளுக்கு அண்ணன், தாய், தந்தை போன்ற உறவுமுறைகள் எதுவும் இருக்கக் கூடாது. ஓரிறைக் கொள்கையில் இதற்கு இடமே யில்லை. திருமறை குர்ஆனில் கடவுளென்பவன் யாரையும் பெறவுமில்லை, யாராலும் பெறப்படவுமில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்கள் யாரைக் கடவுளர் என்று நம்புகிறீர்களோ அந்தக் கடவுள் யாருக்காவது பிறந்தாரெனில் உங்களுடைய கடவுட் கொள்கையில் உங்களுக்கொரு முரணபாடு ஏற்படுகின்றது. அது என்னவென்றால், நீங்கள் கடவுளென்று சொல்கிறீர்கள், கடவுள்தான் அனைத்தையும் படைத்தான் என்றும் சொல்கிறீர்கள். அந்தக் கடவுளே கொஞ்ச காலத்திற்கு முன் இல்லாமலிருந்திருக்கிறார். அவர் யாருக்கோ பிறந்தார் என்றால், அவர் பிறப்பதற்கு முன்புள்ள காலகட்டத்தில் கடவுளென்று ஒருவனில்லை என்றாகிவிடுகிறது. அதாவது, கடவுளுக்கு முன்பே கடவுளின் பெற்றோர்கள் உலகத்தில் இருந்திருக்கிறார்கள் என்று பொருள்படுகிறது.

கடவுளுடைய தாயும் தந்தையும் கடவுளுக்கு முன்பே உலகில் இருந்திருந்தால் அவர்கள்தான் கடவுளராக இருப்பதற்குத் தகுதி பெற்றவர்களே தவிர இல்லாதவனாக இருந்து மனிதர்களின் உடற் சேர்க்கையினாற் பிறந்தவர் எப்படிக் கடவுளாக முடியும்? எனவேதான், திருமறை குர்ஆன் உங்களைப் படைத்த, நீங்கள் வணங்கக் கூடிய ஒரே கடவுளான அல்லாஹ்வுக்குச் சந்ததி கிடையாது, அவனுக்குத் தாய், தகப்பனும் கிடையாது என்று கூறுகிறது.

கடவுளை வைத்துத்தான் மதங்கள் உருவாயின. ஆகவே, கடவுளைப் பற்றிச் சொல்லவில்லையென்றால் அவை மதங்களாகவே அழைக்கப்பட முடியாது. இன்று கடவுளைப் பற்றிக் கூறுகின்ற மார்க்கங்களை எடுத்துப் பார்த்தால் அவை அவற்றின் கடவுளருடைய ஏதோவொரு பலவீனத்தைச் சுட்டி நிற்கிறது. கடவுளுக்குச் சோர்வு, அசதி, மனைவி, சந்ததி – இப்படியெல்லாம் சொல்லக் கூடிய எல்லாச் சித்தாந்தங்களையும் இஸ்லாம் மறுத்துரைக்கிறது. எல்லா நேரத்திலும் அவன் காரியத்திலேயே இருந்து கொண்டிருக்கிறான் என்று திருக் குர்ஆன் சொல்கிறது.

இவ்வாறு சிறந்த ஒரு கடவுட் கொள்கையை இஸ்லாம் உலகத்திற்கு எடுத்துச் சொல்கிறது. மேற்படி இஸ்லாத்தின் கடவுட் கொள்கையை நம்புகின்ற ஒருவன் அதன் உள்ளடக்கமான இன்னுமொரு அம்சத்தையும் நம்ப வேண்டும். அதாவது, நாம் வாழக்கூடிய உலகம் ஒரு நாளில் அழிக்கப்படும். பின்னர் இந்த மொத்த உலகத்தையும் அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்புவான். பின்னர் படைப்பினங்கள், அவற்றின் செயல்களுக்காக விசாரணை செய்யப்பட்டு, அவற்றில் நல்லறஞ் செய்த மனிதனுக்கு அல்லாஹ் வெகுமதிகளைக் கொடுப்பான். தீய செயல்களைப் புரிந்தவனை அல்லாஹ் நாடினால் மன்னிப்பான், நாடினால் தண்டிப்பான். எனவே, மரணத்திற்குப் பின்னர் இது போன்றதொரு வாழ்க்கை இருக்கிறது என்று நாம் நம்ப வேண்டும்.

இஸ்லாத்தைப் பற்றிச் சொல்லப்படுகின்ற எல்லா விதமான விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் அறிவுபூர்வமான விளக்கமிருக்கிறது. அவற்றுக்கு அறிவுபூர்வமாக, அறிவுக்குப் பொருத்தமான முறையில் பதில் சொல்கிறது இஸ்லாம். இஸ்லாம் என்பது இன்றைய உலகத்திற்குத் தேவையான உலகத்திலுள்ள எல்லாப் பிரச்சினைகளுக்கும், எல்லா விவகாரங்களுக்கும் சரியான பரிகாரம் சொல்லக்கூடிய ஒரே மார்க்கமாக இருக்கிறது. இதனாற்றான், இன்று உலகில் வாழும் 180 கோடிக்கும் அதிகமான மக்களை அது கவர்ந்திருக்கிறது. இது போன்றதொரு மார்க்கத்தைப் புரிந்து பின்பற்றக்கூடிய பாக்கியம் நம்மனைவருக்கும் கிடைக்கட்டுமாக!

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505