dailyvideo


ஸூரத்துர் ரஹ்மான் Surat Ar-Raĥmān (The Beneficent) - سورة الرحمن


ஸூரத்துர் ரஹ்மான்(அளவற்ற அருளாளன்)
மதனீ, வசனங்கள்: 78

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
55:1    الرَّحْمَٰنُ
55:1அளவற்ற அருளாளன்,
55:2   عَلَّمَ الْقُرْآنَ
55:2இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.
55:3   خَلَقَ الْإِنسَانَ
55:3அவனே மனிதனைப் படைத்தான்.
55:4   عَلَّمَهُ الْبَيَانَ
55:4அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான்.
55:5   الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ
55:5சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன.
55:6   وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ
55:6(கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் - (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன.
55:7   وَالسَّمَاءَ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ
55:7மேலும், வானம் - அவனே அதை உயர்த்தித் தராசையும் ஏற்படுத்தினான்.
55:8   أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ
55:8நீங்கள் நிறுப்பதில் வரம்பு மீறாது இருப்பதற்காக.
55:9   وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ
55:9ஆகவே, நீங்கள் நிறுப்பதை சரியாக நிலை நிறுத்துங்கள்; எடையைக் குறைக்காதீர்கள்.
55:10   وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ
55:10இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
55:11   فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الْأَكْمَامِ
55:11அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-
55:12   وَالْحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانُ
55:12தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.
55:13   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:13ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:14   خَلَقَ الْإِنسَانَ مِن صَلْصَالٍ كَالْفَخَّارِ
55:14சுட்ட மண் பாண்டங்களைப் போல் (தட்டினால்) சப்தமுண்டாகும் களிமண்ணிலிருந்து, அவன் (ஆதி) மனிதனைப் படைத்தான்.
55:15   وَخَلَقَ الْجَانَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ
55:15நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான்.
55:16   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:16ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:17   رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ
55:17இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே; இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே.
55:18   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:18ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:19   مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ
55:19அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான்.
55:20   بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ
55:20(ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது; அதை அவை மீறமாட்டா.
55:21   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:21ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:22   يَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ
55:22அவ்விரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் வெளியாகின்றன.
55:23   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:23ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  
55:24   وَلَهُ الْجَوَارِ الْمُنشَآتُ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ
55:24அன்றியும், மலைகளைப் போல் உயரமாகச் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.
55:25   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:25ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:26   كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ
55:26(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே -
55:27   وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ
55:27மிக்க வல்லமையும், கண்ணியமும் உடைய உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும்.
55:28   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:28ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:29   يَسْأَلُهُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِي شَأْنٍ
55:29வானங்களிலும், பூமியிலுமுள்ளோர் அனைவரும்; (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர்; ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கின்றான்.
55:30   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:30ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:31   سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ الثَّقَلَانِ
55:31இரு சாரார்களே! சீக்கிரமே நாம் உங்களுக்காக (கேள்வி கணக்குக் கேட்பதற்கு) அவகாசம் எடுப்போம்.
55:32   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:32ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:33   يَا مَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ إِنِ اسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا مِنْ أَقْطَارِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فَانفُذُوا ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَانٍ
55:33“மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.
55:34   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:34ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:35   يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ
55:35(மறுமையில்) உங்களிருசாரார் மீதும், நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும், அப்பொழுது நீங்கள் (இரு சாராரும், எவரிடமிருந்தும்) உதவி பெற்றுக் கொள்ள மாட்டீர்கள்.
55:36   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:36ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:37   فَإِذَا انشَقَّتِ السَّمَاءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ
55:37எனவே, (கியாமத் வரும் நேரம்) அப்பொழுது வானம் பிளந்து, ரோஜாவின் (நிறம் போலாகி) எண்ணெய் போலாகிவிடும்.
55:38   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:38ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:39   فَيَوْمَئِذٍ لَّا يُسْأَلُ عَن ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ
55:39எனவே, அந்நாளில் மனிதர்களிடமோ, ஜின்களிடமோ, அவர்களுடைய பாவத்தைப் பற்றி, (வாய் மொழியாகக்) கேட்கப்படமாட்டாது.
55:40   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:40ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:41   يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ
55:41குற்றவாளிகள், அவர்களுடைய (முகக்குறி) அடையாளங்களை கொண்டே அறியப்படுவார்கள் - அப்போது (அவர்களுடைய) முன் நெற்றி உரோமங்களும், கால்களும் கொண்டு பிடிக்கப்படுவார்கள்
55:42   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:42ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:43   هَٰذِهِ جَهَنَّمُ الَّتِي يُكَذِّبُ بِهَا الْمُجْرِمُونَ
55:43அன்று அவர்களிடம்: “இது தான் குற்றவாளிகள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்த நரகம்” (என்று கூறப்படும்).
55:44   يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ آنٍ
55:44அவர்கள் அதற்கு இடையிலும், கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்கிடையிலும் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
55:45   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:45ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?  
55:46   وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ
55:46தன் இறைவனின் முன் (விசாரணைக்காக மறுமையில்) நிற்க வேண்டுமென்பதைப் பயந்தவனுக்கு இரு சுவர்க்கச் சோலைகள் இருக்கின்றன.
55:47   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:47ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:48   ذَوَاتَا أَفْنَانٍ
55:48அவ்விரண்டு (சுவர்க்கச் சோலைகளு)ம் (பலவிதமான மரக்)கிளைகளையுடையவை.
55:49   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:49ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:50   فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ
55:50அவ்விரண்டிலும் இரண்டு ஊற்றுகள் (உதித்து) ஓடிக் கொண்டே இருக்கும்.
55:51   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:51ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:52   فِيهِمَا مِن كُلِّ فَاكِهَةٍ زَوْجَانِ
55:52அவ்விரண்டிலும், ஒவ்வொரு கனிவர்க்கத்திலும் இரட்டை வகைகள் உண்டு.
55:53   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:53ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:54   مُتَّكِئِينَ عَلَىٰ فُرُشٍ بَطَائِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى الْجَنَّتَيْنِ دَانٍ
55:54அவர்கள் விரிப்புகளின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அவற்றின் உள் பாகங்கள் “இஸ்தப்ரக்” என்னும் பட்டினாலுள்ளவை; மேலும் இரு சுவனச் சோலைகளில் (பழங்கள்) கொய்வதற்கு நெருங்கியிருக்கும்.
55:55   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:55ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:56   فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ
55:56அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
55:57   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:57ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:58   كَأَنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ
55:58அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.
55:59   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:59ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:60   هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ
55:60நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
55:61   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:61ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:62   وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
55:62மேலும் அவ்விரண்டு (சோலைகளு)ம் அல்லாமல், வேறு இரு சுவனச் சோலைகளும் இருக்கின்றன.
55:63   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:63ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:64   مُدْهَامَّتَانِ
55:64அவ்விரண்டும் கரும் பச்சையான நிறமுடையவை.
55:65   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:65ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:66   فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ
55:66அவ்விரண்டிலும், இரு ஊற்றுக்கள் (சதா) பொங்கிக் கொண்டே இருக்கும்.
55:67   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:67ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:68   فِيهِمَا فَاكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ
55:68அவ்விரண்டில், (பற்பல) கனி வகைகளும், பேரீச்சையும், மாதுளையும் உண்டு.
55:69   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:69ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:70   فِيهِنَّ خَيْرَاتٌ حِسَانٌ
55:70அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.
55:71   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:71ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:72   حُورٌ مَّقْصُورَاتٌ فِي الْخِيَامِ
55:72ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.
55:73   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:73ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:74   لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَانٌّ
55:74அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
55:75   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:75ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:76   مُتَّكِئِينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِيٍّ حِسَانٍ
55:76(அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
55:77   فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
55:77ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?
55:78   تَبَارَكَ اسْمُ رَبِّكَ ذِي الْجَلَالِ وَالْإِكْرَامِ
55:78மிக்க சிறப்பும், கண்ணியமுமுள்ள உம்முடைய இறைவனின் திருப்பெயர் மிகவும் பாக்கிய முடையது.

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505