ஸூரத்துஷ் ஷம்ஸ்
ஸூரத்துஷ் ஷம்ஸ்(சூரியன்)
மக்கீ, வசனங்கள்: 15
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
மக்கீ, வசனங்கள்: 15
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
91:1 وَالشَّمْسِ وَضُحَاهَا
91:1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
91:2 وَالْقَمَرِ إِذَا تَلَاهَا
91:2. (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
91:3 وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا
91:3. (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
91:4 وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا
91:4. (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
91:5 وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا
91:5. வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
91:6 وَالْأَرْضِ وَمَا طَحَاهَا
91:6. பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
91:7 وَنَفْسٍ وَمَا سَوَّاهَا
91:7. ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
91:8 فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا
91:8. அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
91:9 قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
91:9. அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
91:10 وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
91:10. ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
91:11 كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا
91:11. “ஸமூது” (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
91:12 إِذِ انبَعَثَ أَشْقَاهَا
91:12. அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
91:13 فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا
91:13. அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: “இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது; இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்.
91:14 فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا
91:14. ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
91:15 وَلَا يَخَافُ عُقْبَاهَا
91:15. அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.