dailyvideo


ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத்


ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)
மக்கீ, வசனங்கள்: 182

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
37:1    وَالصَّافَّاتِ صَفًّا
37:1அணிவகுத்து நிற்பவர்கள் மீது சத்தியமாக,
37:2   فَالزَّاجِرَاتِ زَجْرًا
37:2பலமாக விரட்டுபவர்கள் மீது சத்தியமாக,
37:3   فَالتَّالِيَاتِ ذِكْرًا
37:3(நினைவூட்டும்) வேதத்தை ஓதுவோர் மீது சத்தியமாக,
37:4   إِنَّ إِلَٰهَكُمْ لَوَاحِدٌ
37:4நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே.
37:5   رَّبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ
37:5வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன்; கீழ்திசைகளின் இறைவன்.
37:6   إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ
37:6நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம்.
37:7   وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَانٍ مَّارِدٍ
37:7(அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்).
37:8   لَّا يَسَّمَّعُونَ إِلَى الْمَلَإِ الْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍ
37:8(அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது; இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள்.
37:9   دُحُورًا ۖ وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ
37:9(அவர்கள்) துரத்தப்படுகிறார்கள்; அவர்களுக்கு நிலையான வேதனையுமுண்டு.
37:10   إِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَأَتْبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ
37:10(ஏதேனும் செய்தியை) இறாய்ஞ்சிச் செல்ல முற்பட்டால், அப்பொழுது அவனைப் பிரகாச தீப்பந்தம் பின்தொடரும்.
37:11   فَاسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَا ۚ إِنَّا خَلَقْنَاهُم مِّن طِينٍ لَّازِبٍ
37:11ஆகவே, “படைப்பால் அவர்கள் வலியவர்களா அல்லது நாம் படைத்திருக்கும் (வானம், பூமி போன்றவையா) என்று (நிராகரிப்போரிடம் நபியே!) நீர் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களைப் பிசுபிசுப்பன களிமண்ணால்தான் படைத்திருக்கின்றோம்.
37:12   بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ
37:12(நபியே! அல்லாஹ்வின் வல்லமையைக் கண்டு) நீர் ஆச்சரியப்படுகிறீர்; (ஆனால்) அவர்கள் பரிகாசம் செய்கின்றனர்.
37:13   وَإِذَا ذُكِّرُوا لَا يَذْكُرُونَ
37:13அன்றியும், அவர்களுக்கு நினைவூட்டப்பட்டாலும், (அதனை) அவர்கள் நினைவிலிறுத்திக் கொள்வதில்லை.
37:14   وَإِذَا رَأَوْا آيَةً يَسْتَسْخِرُونَ
37:14அவர்கள் (ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக் கண்டாலும், (அதை) மெத்தப்பரிகாசம் செய்கின்றனர்.
37:15   وَقَالُوا إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ مُّبِينٌ
37:15“இது பகிரங்கமான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
37:16   أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ
37:16“நாங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் நாங்கள் ஆகிவிட்டாலும், மெய்யாகவே (நாங்கள் மீண்டும் உயிர்ப்பித்து) எழுப்பப்படுபவர்களா? (என்றும் கேட்கின்றனர்.)
37:17   أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ
37:17“அவ்வாறே, முந்தைய நம் தந்தையர்களுமா? (எழுப்பப்படுவார்கள்? என்றும் கேட்கின்றனர்.)
37:18   قُلْ نَعَمْ وَأَنتُمْ دَاخِرُونَ
37:18“ஆம்! (உங்கள் செயல்களின் காரணமாக) நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும் எழுப்பப்படு)வீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
37:19   فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ فَإِذَا هُمْ يَنظُرُونَ
37:19ஒரே சப்தம் தான்! உடனே அவர்கள் (திடுக்கிட்டு எழுந்து) பார்ப்பார்கள்.
37:20   وَقَالُوا يَا وَيْلَنَا هَٰذَا يَوْمُ الدِّينِ
37:20(அவ்வேளை) “எங்களுடைய கேடே! இது கூலி கொடுக்கும் நாளாயிற்றே” என்று அவர்கள் கூறுவர்.
37:21   هَٰذَا يَوْمُ الْفَصْلِ الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ
37:21“நீங்கள் பொய்ப்பிக்க முற்பட்டுக் கொண்டிருந்தீர்களே அந்தத் தீர்ப்பு நாள் இதுதான்!” (என்று அவர்களுக்குக் கூறப்படும்.)  
37:22   احْشُرُوا الَّذِينَ ظَلَمُوا وَأَزْوَاجَهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ
37:22“அநியாயம் செய்தார்களே அவர்களையும் அவர்களுடைய துணைகளையும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றையும் ஒன்று சேருங்கள்.
37:23   مِن دُونِ اللَّهِ فَاهْدُوهُمْ إِلَىٰ صِرَاطِ الْجَحِيمِ
37:23“அல்லாஹ்வையன்றி (அவர்கள் வழிபட்டவை அவை); பின்னர் அவர்களை, நரகத்தின் பாதைக்கு கொண்டு செல்லுங்கள்.
37:24   وَقِفُوهُمْ ۖ إِنَّهُم مَّسْئُولُونَ
37:24“இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்” (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)
37:25   مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ
37:25“உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் (உலகில் செய்தது போன்று) உதவி செய்து கொள்ளவில்லை?” (என்று கேட்கப்படும்).
37:26   بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُونَ
37:26ஆனால் அவர்கள் அந்நாளில் (எதுவும் செய்ய இயலாது தலை குனிந்து) கீழ்படிந்தவர்களாக இருப்பார்கள்.
37:27   وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَاءَلُونَ
37:27அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள்.
37:28   قَالُوا إِنَّكُمْ كُنتُمْ تَأْتُونَنَا عَنِ الْيَمِينِ
37:28(தம் தலைவர்களை நோக்கி:) “நிச்சயமாக நீங்கள் வலப்புறத்திலிருந்து (சக்தியுடன்) எங்களிடம் வருகிறவர்களாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
37:29   قَالُوا بَل لَّمْ تَكُونُوا مُؤْمِنِينَ
37:29(“அப்படியல்ல!) நீங்கள் தாம் முஃமின்களாக - நம்பிக்கை கொண்டோராய் - இருக்கவில்லை!” என்று அ(த்தலை)வர்கள் கூறுவர்.
37:30   وَمَا كَانَ لَنَا عَلَيْكُم مِّن سُلْطَانٍ ۖ بَلْ كُنتُمْ قَوْمًا طَاغِينَ
37:30“அன்றியும் உங்கள் மீது எங்களுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை; எனினும் நீங்கள் தாம் வரம்பு கடந்து பாவம் செய்யும் கூட்டத்தாராக இருந்தீர்கள்.”
37:31   فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَا ۖ إِنَّا لَذَائِقُونَ
37:31“ஆகையால், எங்கள் இறைவனுடைய வாக்கு எங்கள் மீது உண்மையாகி விட்டது; நிச்சயமாக நாம் (யாவரும் வேதனையைச்) சுவைப்வர்கள் தாம்!
37:32   فَأَغْوَيْنَاكُمْ إِنَّا كُنَّا غَاوِينَ
37:32“(ஆம்) நாங்கள் உங்களை வழிகெடுத்தோம்; நிச்சயமாக நாங்களே வழிகெட்டுத்தான் இருந்தோம்.”
37:33   فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ
37:33ஆகவே, அந்நாளில் நிச்சயமாக அவர்கள் வேதனையில் கூட்டானவர்களாகவே இருப்பார்கள்.
37:34   إِنَّا كَذَٰلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ
37:34குற்றவாளிகளை இவ்வாறு தான் நாம் நிச்சயமாக நடத்துவோம்.
37:35   إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ لَهُمْ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ يَسْتَكْبِرُونَ
37:35“அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், மெய்யாகவே அவர்கள் பெருமையடித்தவர்களாக இருந்தனர்.
37:36   وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُو آلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُونٍ
37:36“ஒரு பைத்தியக்காரப் புலவருக்காக நாங்கள் மெய்யாக எங்கள் தெய்வங்களைக் கைவிட்டு விடுகிறவர்களா?” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
37:37   بَلْ جَاءَ بِالْحَقِّ وَصَدَّقَ الْمُرْسَلِينَ
37:37அப்படியல்ல! அவர் சத்தியத்தையே கொண்டு வந்திருக்கிறார்; அன்றியும் (தமக்கு முன்னர் வந்த) தூதர்களையும் உண்மைப்படுத்துகிறார்.
37:38   إِنَّكُمْ لَذَائِقُو الْعَذَابِ الْأَلِيمِ
37:38(இதை நிராகரிப்போராயின்) நிச்சயமாக நீங்கள் நோவினை தரும் வேதனையை அனுபவிப்பவர்கள் தாம்.
37:39   وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ
37:39ஆனால், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கன்றி (வேறு) எதற்கும் நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்.
37:40   إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
37:40அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களோ (எனின்)-
37:41   أُولَٰئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ
37:41அவர்களுக்கு அறியப்பட்டுள்ள உணவு அவர்களுக்கு இருக்கிறது.
37:42   فَوَاكِهُ ۖ وَهُم مُّكْرَمُونَ
37:42கனி வகைகள் (அளிக்கப்படும்), இன்னும் அவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள்;
37:43   فِي جَنَّاتِ النَّعِيمِ
37:43இன்பம் அளிக்கும் சுவர்க்கங்களில் -
37:44   عَلَىٰ سُرُرٍ مُّتَقَابِلِينَ
37:44ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
37:45   يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍ مِّن مَّعِينٍ
37:45தெளிவான பானம் நிறைந்த குவளைகள் அவர்களைச் சுற்றி கொண்டுவரும்.
37:46   بَيْضَاءَ لَذَّةٍ لِّلشَّارِبِينَ
37:46(அது) மிக்க வெண்மையானது; அருந்துவோருக்கு மதுரமானது.
37:47   لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ
37:47அதில் கெடுதியும் இராது; அதனால் அவர்கள் புத்தி தடுமாறுபவர்களும் அல்லர்.
37:48   وَعِندَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ عِينٌ
37:48இன்னும், அவர்களிடத்தில் அடக்கமான பார்வையும், நெடிய கண்களும் கொண்ட (அமர கன்னியரும்) இருப்பார்கள்.
37:49   كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُونٌ
37:49(தூய்மையில் அவர்கள் சிப்பிகளில்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் இருப்பார்கள்.
37:50   فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَسَاءَلُونَ
37:50(அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள்.
37:51   قَالَ قَائِلٌ مِّنْهُمْ إِنِّي كَانَ لِي قَرِينٌ
37:51அவர்களில் ஒருவர்; எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார்.
37:52   يَقُولُ أَإِنَّكَ لَمِنَ الْمُصَدِّقِينَ
37:52(மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப் படுவோம் என்பதை) உண்மையென ஏற்பவர்களில் நிச்சயமாக நீயும் ஒருவனா எனக் கேட்டான்.
37:53   أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَدِينُونَ
37:53“நாம் இறந்து மண்ணாகவும், எலும்புகளாகவுமாகி விட்டபின், (மீண்டும் நாம் உயிர்ப்பிக்கப்பட்டு) கூலி வழங்கப்பெறுவோமா?” என்றும் கேட்டான்.)
37:54   قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَ
37:54(அவ்வாறு கூறியவனை) “நீங்கள் பார்க்(க விரும்பு)கிறீர்களா?” என்றும் கூறுவார்.
37:55   فَاطَّلَعَ فَرَآهُ فِي سَوَاءِ الْجَحِيمِ
37:55அவர் (கீழே) நோக்கினார்; அவனை நரகத்தின் நடுவில் பார்த்தார்.
37:56   قَالَ تَاللَّهِ إِن كِدتَّ لَتُرْدِينِ
37:56(அவனிடம்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
37:57   وَلَوْلَا نِعْمَةُ رَبِّي لَكُنتُ مِنَ الْمُحْضَرِينَ
37:57“என் இறைவனுடைய அருள் இல்லாதிருந்தால், நானும் (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவனாகியிருப்பேன்.
37:58   أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ
37:58“(மற்றொரு முறையும்) நாம் இறந்து விடுவோமா?
37:59   إِلَّا مَوْتَتَنَا الْأُولَىٰ وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
37:59“(இல்லை) நமக்கு முந்திய மரணத்தைத் தவிர வேறில்லை; அன்றியும், நாம் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்” என்று கூறுவார்.
37:60   إِنَّ هَٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِيمُ
37:60நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்.
37:61   لِمِثْلِ هَٰذَا فَلْيَعْمَلِ الْعَامِلُونَ
37:61எனவே பாடுபடுபவர்கள் இது போன்றதற்காகவே பாடுபடவேண்டும்.
37:62   أَذَٰلِكَ خَيْرٌ نُّزُلًا أَمْ شَجَرَةُ الزَّقُّومِ
37:62அது சிறப்பான விருந்தா? அல்லது (நரகத்திலிருக்கும் கள்ளி) “ஜக்கூம்” என்ற மரமா?
37:63   إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً لِّلظَّالِمِينَ
37:63நிச்சயமாக நாம் அதை அநியாயக்காரர்களுக்கு ஒரு சோதனையாகவே செய்திருக்கிறோம்.
37:64   إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي أَصْلِ الْجَحِيمِ
37:64மெய்யாகவே அது நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும் மரமாகும்.
37:65   طَلْعُهَا كَأَنَّهُ رُءُوسُ الشَّيَاطِينِ
37:65அதன் பாளைகள் ஷைத்தான்களின் தலைகளைப் போலிருக்கும்.
37:66   فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ
37:66நிச்சயமாக, அவர்கள் அதிலிருந்தே புசிப்பார்கள்; அதைக்கொண்டு தங்களுடைய வயிறுகளை நிரப்பிக் கொள்வார்கள்.
37:67   ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا لَشَوْبًا مِّنْ حَمِيمٍ
37:67பின்னர், நிச்சயமாக அவர்களுக்குக் குடிக்க, கொதிக்கும் நீர் கொடுக்கப்படும்.
37:68   ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى الْجَحِيمِ
37:68அதன் பின்னர் அவர்கள் மீளும் தலம் நிச்சயமாக நரகம்தான்.
37:69   إِنَّهُمْ أَلْفَوْا آبَاءَهُمْ ضَالِّينَ
37:69நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி கேட்டிலேயே கண்டார்கள்.
37:70   فَهُمْ عَلَىٰ آثَارِهِمْ يُهْرَعُونَ
37:70ஆகையால், அவர்களுடைய அடிச்சுவடுகள் மீதே இவர்களும் விரைந்தார்கள்.
37:71   وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ الْأَوَّلِينَ
37:71இன்னும், இவர்களுக்கு முன்னரும் அப்பண்டைய மக்களில் பெரும்பாலோர் வழி கெட்டிருந்தனர்.
37:72   وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم مُّنذِرِينَ
37:72மேலும், நிச்சயமாக நாம் அவர்களிடையே அச்சமூட்டி எச்சரிப்பவர்களை அனுப்பினோம்.
37:73   فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنذَرِينَ
37:73பிறகு, அவ்வாறு அச்சமூட்டி எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு என்னவாயிற்றென்று (நபியே!) நீர் பாரும்.
37:74   إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
37:74அல்லாஹ்வுடைய அந்தரங்க சுத்தியான அடியார்களைத் தவிர.  
37:75   وَلَقَدْ نَادَانَا نُوحٌ فَلَنِعْمَ الْمُجِيبُونَ
37:75அன்றியும் நூஹ் நம்மைப் பிரார்த்தித்தார்; பிரார்த்தனைக்கு பதிலளிப்பதில் நாமே சிறந்தோர் ஆவோம்.
37:76   وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ
37:76ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம்.
37:77   وَجَعَلْنَا ذُرِّيَّتَهُ هُمُ الْبَاقِينَ
37:77மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம்.
37:78   وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
37:78மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.
37:79   سَلَامٌ عَلَىٰ نُوحٍ فِي الْعَالَمِينَ
37:79“ஸலாமுன் அலாநூஹ்” - அகிலங்கள் எங்கும் நூஹ் மீது ஸலாம் உண்டாவதாக.
37:80   إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
37:80இவ்வாறே, நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
37:81   إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
37:81நிச்சயமாக அவர் (நூஹ்) முஃமின்களான நம் நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்.
37:82   ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ
37:82பிறகு நாம் மற்றவர்களை (வெள்ளத்தில்) மூழ்கடித்தோம்.
37:83   وَإِنَّ مِن شِيعَتِهِ لَإِبْرَاهِيمَ
37:83நிச்சயமாக, இப்ராஹீமும் அவருடைய வழியைப் பின்பற்றியவர்களில் ஒருவர் தாம்.
37:84   إِذْ جَاءَ رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ
37:84அவர் தூய நெஞ்சத்துடன் தம்முடைய இறைவனிடம் வந்தபோது (நபியே! நீர் நினைவு கூர்வீராக).
37:85   إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَاذَا تَعْبُدُونَ
37:85அவர் தம் தந்தையையும், தம் சமூகத்தாரையும் நோக்கி “நீங்கள் எதனை வணங்குகிறீர்கள்? எனக் கேட்ட போது,
37:86   أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ
37:86“அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?”
37:87   فَمَا ظَنُّكُم بِرَبِّ الْعَالَمِينَ
37:87“அவ்வாறாயின் அகிலங்களுக்கெல்லாம் இறைவன் பற்றி உங்கள் எண்ணம் தான் என்ன?” (என்று கேட்டார்.)
37:88   فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ
37:88பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.
37:89   فَقَالَ إِنِّي سَقِيمٌ
37:89“நிச்சயமாக நாம் நோயாளியாக இருக்கிறேன்” என்றும் கூறினார்.
37:90   فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ
37:90எனவே அவரை விட்டும் அ(வருடைய சமூகத்த)வர்கள் திரும்பிச் சென்றனர்.
37:91   فَرَاغَ إِلَىٰ آلِهَتِهِمْ فَقَالَ أَلَا تَأْكُلُونَ
37:91அப்பால் அவர்களுடைய தெய்வங்களின் பால் அவர் சென்று; “(உங்களுக்கு முன் படைக்கப்பட்டுள்ள உணவுகளை) நீங்கள் உண்ணமாட்டீர்களா?” என்று கூறினார்.
37:92   مَا لَكُمْ لَا تَنطِقُونَ
37:92“உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை?” (என்றும் கேட்டார்.)
37:93   فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًا بِالْيَمِينِ
37:93பின் அவர் அவற்றின் பக்கம் திரும்பி வலக்கையால் அவற்றை அடித்து (உடைத்து) விட்டார்.
37:94   فَأَقْبَلُوا إِلَيْهِ يَزِفُّونَ
37:94(அவற்றை வணங்குபவர்கள்) அவர்பால் விரைந்து வந்தார்கள்.
37:95   قَالَ أَتَعْبُدُونَ مَا تَنْحِتُونَ
37:95அவர் கூறினார்! “நீங்கள் செதுக்கிய இவற்றையா வணங்குகிறீர்கள்?”
37:96   وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا تَعْمَلُونَ
37:96“உங்களையும், நீங்கள் செய்த(இ)வற்றையும், அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.”
37:97   قَالُوا ابْنُوا لَهُ بُنْيَانًا فَأَلْقُوهُ فِي الْجَحِيمِ
37:97அவர்கள் கூறினார்கள்: “இவருக்காக(ப் பெரியதொரு நெருப்புக்) கிடங்கை அமைத்து எரிநெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்.”
37:98   فَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَسْفَلِينَ
37:98(இவ்வாறாக) அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள்; ஆனால், நாம் அவர்களையே இழிவுபடுத்தி விட்டோம்.
37:99   وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهْدِينِ
37:99மேலும், அவர் கூறினார்: “நிச்சயமாக நாம் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்.”
37:100   رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
37:100“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
37:101   فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ
37:101எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
37:102   فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ
37:102பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
37:103   فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ
37:103ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
37:104   وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ
37:104நாம் அவரை “யா இப்றாஹீம்!” என்றழைத்தோம்.
37:105   قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
37:105“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
37:106   إِنَّ هَٰذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ
37:106“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
37:107   وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ
37:107ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.
37:108   وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
37:108இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
37:109   سَلَامٌ عَلَىٰ إِبْرَاهِيمَ
37:109“ஸலாமுன் அலா இப்ராஹீம்” (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!
37:110   كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
37:110இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.
37:111   إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
37:111நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.
37:112   وَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ نَبِيًّا مِّنَ الصَّالِحِينَ
37:112ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.
37:113   وَبَارَكْنَا عَلَيْهِ وَعَلَىٰ إِسْحَاقَ ۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِّنَفْسِهِ مُبِينٌ
37:113இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; மேலும் அவ்விருவருடைய சந்ததியரில் நன்மை செய்பவர்களும் இருக்கின்றார்கள்; அன்றியும் தமக்குத் தாமே பகிரங்கமாக அநியாயம் செய்து கொள்வோரும் இருக்கின்றனர்.
37:114   وَلَقَدْ مَنَنَّا عَلَىٰ مُوسَىٰ وَهَارُونَ
37:114மேலும், மூஸா, ஹாரூன் ஆகியவர்கள் மீதும் நாம் நிச்சயமாக அருள் புரிந்தோம்.
37:115   وَنَجَّيْنَاهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِيمِ
37:115அவ்விருவரையும், அவ்விருவருடைய சமூகத்தாரையும் மிகப்பெரும் துன்பத்திலிருந்து இரட்சித்தோம்.
37:116   وَنَصَرْنَاهُمْ فَكَانُوا هُمُ الْغَالِبِينَ
37:116மேலும், நாம் அவர்களுக்கு உதவி செய்தோம்; எனவே அவர்கள் தாம் வெற்றி பெற்றோரானார்கள்.
37:117   وَآتَيْنَاهُمَا الْكِتَابَ الْمُسْتَبِينَ
37:117அவ்விருவருக்கும் நாம் துலக்கமான வேதத்தைக் கொடுத்தோம்.
37:118   وَهَدَيْنَاهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
37:118இன்னும், நாம் அவ்விருவருக்கும் நேர்வழியைக் காண்பித்தோம்.
37:119   وَتَرَكْنَا عَلَيْهِمَا فِي الْآخِرِينَ
37:119இன்னும் அவ்விருவருக்குமாகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்;
37:120   سَلَامٌ عَلَىٰ مُوسَىٰ وَهَارُونَ
37:120“ஸலாமுன் அலா மூஸா வஹாரூன்” மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாவதாக.
37:121   إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
37:121இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
37:122   إِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
37:122நிச்சயமாக அவ்விருவரும் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்கள்.
37:123   وَإِنَّ إِلْيَاسَ لَمِنَ الْمُرْسَلِينَ
37:123மேலும், நிச்சயமாக இல்யாஸும் முர்ஸல்(களில் - தூதராக அனுப்பப்பட்டவர்)களில் ஒருவர் தாம்.
37:124   إِذْ قَالَ لِقَوْمِهِ أَلَا تَتَّقُونَ
37:124அவர் தம் சமூகத்தவரிடம்: “நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?” என்று (போதித்துச்) சொல்லியதை (நினைவு கூர்வீராக).
37:125   أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ أَحْسَنَ الْخَالِقِينَ
37:125“நீங்கள் படைப்பவர்களில் மிகச் சிறப்பானவனை விட்டு விட்டு “பஃலு” (எனும் சிலையை) வணங்குகிறீர்களா?
37:126   اللَّهَ رَبَّكُمْ وَرَبَّ آبَائِكُمُ الْأَوَّلِينَ
37:126“அல்லாஹ்தான் - உங்களுடைய இறைவனும், உங்களுடைய முன் சென்ற மூதாதையர்களின் இறைவனும் ஆவான்.”
37:127   فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ لَمُحْضَرُونَ
37:127ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள்; ஆகையால், அவர்கள் (மறுமையில் இறைவன் முன்னே தண்டனைக்காக) நிச்சயமாக கொண்டு வரப்படுவார்கள்.
37:128   إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
37:128அல்லாஹ்வுடைய தூய அடியார்களைத் தவிர. (இவர்களுக்கு நற்கூலியுண்டு.)
37:129   وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
37:129மேலும், நாம் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
37:130   سَلَامٌ عَلَىٰ إِلْ يَاسِينَ
37:130“ஸலாமுன் அலா இல்யாஸீன்” இல்யாஸீன் மீது ஸலாமுண்டாவதாக.
37:131   إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
37:131இவ்வாறே நன்மை செய்வோருக்கு நிச்சயமாக நாம் கூலி கொடுக்கிறோம்.
37:132   إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ
37:132நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)அடியார்களில் நின்றுமுள்ளவர்.
37:133   وَإِنَّ لُوطًا لَّمِنَ الْمُرْسَلِينَ
37:133மேலும், லூத்தும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
37:134   إِذْ نَجَّيْنَاهُ وَأَهْلَهُ أَجْمَعِينَ
37:134அவரையும் அவருடைய குடும்பத்தார் யாவரையும் காத்துக் கொண்டோம் -
37:135   إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ
37:135பின்னால் தங்கிவிட்டவர்களிடையே இருந்துவிட்ட (லூத்தின் மனைவியான) கிழவியைத் தவிர்த்து.
37:136   ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ
37:136பின்னர் நாம் மற்றவர்களை அழித்து விட்டோம்.
37:137   وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم مُّصْبِحِينَ
37:137இன்னும், நீங்கள் காலை வேளைகளில் அவர்களின் (அழிந்து போன ஊர்களின்) மீதே நடந்து செல்கிறீர்கள்.
37:138   وَبِاللَّيْلِ ۗ أَفَلَا تَعْقِلُونَ
37:138இன்னும் இரவிலும் கூட(ச் செல்கிறீர்கள். இதைக்கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற மாட்டீர்களா?  
37:139   وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ
37:139மேலும், யூனுஸும் நிச்சயமாக முர்ஸல்களில் - அனுப்பப்பட்டவர்களில் நின்றுமுள்ளவர்.
37:140   إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ
37:140நிரப்பப்பட்ட கப்பலின் பால் அவர் ஒளித்தோடிய போது -
37:141   فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ
37:141அ(க்கப்பலிலுள்ள)வர்கள் சீட்டுக்குலுக்கிப் போட்டுப் பார்த்தனர் - இவர் தாம் குற்றமுள்ளவர் (என்று தீர்மானித்தனர்).
37:142   فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ مُلِيمٌ
37:142ஆகவே, (அவர்களுடைய) பழிப்புக்கிடமான நிலையில் (கடலில்) எறியப்பட வேண்டியவரானார்; ஒரு மீன் விழுங்கிற்று.
37:143   فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنَ الْمُسَبِّحِينَ
37:143ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -
37:144   لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
37:144(மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.
37:145   فَنَبَذْنَاهُ بِالْعَرَاءِ وَهُوَ سَقِيمٌ
37:145ஆனால், அவர் நோயுற்றிருந்த நிலையில், நாம் அவரை (மீன் வயிற்றிலிருந்து வெளியேற்றி) வெட்ட வெளியில் போட்டோம்.
37:146   وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً مِّن يَقْطِينٍ
37:146அன்றியும் நாம் அவருக்கு மேல் ஒரு சுரைக்கொடியை முளைப்பித்(து நிழலிடுமாறு செய்)தோம்.
37:147   وَأَرْسَلْنَاهُ إِلَىٰ مِائَةِ أَلْفٍ أَوْ يَزِيدُونَ
37:147மேலும், நாம் அவரை ஒரு நூறாயிரம் அல்லது அதற்கதிகமானவர்களிடம் அனுப்பி வைத்தோம்.
37:148   فَآمَنُوا فَمَتَّعْنَاهُمْ إِلَىٰ حِينٍ
37:148ஆகவே அவர்கள் ஈமான் கொண்டார்கள்;ஆகையால் நாம் அவர்களை ஒரு காலம் வரை சுகிக்கச் செய்தோம்.  
37:149   فَاسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُونَ
37:149(நபியே!) அவர்களிடம் கேளும்: உம் இறைவனுக்குப் பெண் மக்களையும் அவர்களுக்கு ஆண்மக்களையுமா (கற்பனை செய்கிறார்கள்) என்று.
37:150   أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ إِنَاثًا وَهُمْ شَاهِدُونَ
37:150அல்லது நாம் மலக்குகளைப் பெண்களாகவா படைத்தோம்? (அதற்கு) அவர்கள் சாட்சிகளா?
37:151   أَلَا إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ لَيَقُولُونَ
37:151“அறிந்து கொள்க! நிச்சயமாக இவர்கள் தங்கள் கற்பனையில் தான் கூறுகின்றனர்.”
37:152   وَلَدَ اللَّهُ وَإِنَّهُمْ لَكَاذِبُونَ
37:152“அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான்” (என்று கூறுபவர்கள்) நிச்சயமாகப் பொய்யர்களே!
37:153   أَصْطَفَى الْبَنَاتِ عَلَى الْبَنِينَ
37:153(அன்றியும், அல்லாஹ்) அவன் ஆண்மக்களை விட்டுப் பெண்மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?
37:154   مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
37:154உங்களுக்கு என்ன (நேர்ந்து விட்டது)? எவ்வாறு நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?
37:155   أَفَلَا تَذَكَّرُونَ
37:155நீங்கள் சிந்தித்துணர மாட்டீர்களா?
37:156   أَمْ لَكُمْ سُلْطَانٌ مُّبِينٌ
37:156அல்லது உங்களிடம் தெளிவான ஆதாரம் எதுவும் இருக்கிறதா?
37:157   فَأْتُوا بِكِتَابِكُمْ إِن كُنتُمْ صَادِقِينَ
37:157நீங்கள் உண்மையாளர்களாயிருப்பின், உங்கள் வேத (ஆதார)த்தைக் கொண்டு வாருங்கள்.
37:158   وَجَعَلُوا بَيْنَهُ وَبَيْنَ الْجِنَّةِ نَسَبًا ۚ وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ
37:158அன்றியும் இவர்கள் அல்லாஹ்வுக்கும் ஜின்களுக்குமிடையில் (வம்சாவளி) உறவை (கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர்; ஆனால் ஜின்களும் (மறுமையில் இறைவன் முன்) நிச்சயமாகக் கொண்டுவரப்படுவார்கள் என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்.
37:159   سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ
37:159எனவே, அவர்கள் இவ்வாறு வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன்.
37:160   إِلَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
37:160அந்தரங்க சுத்தியான அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர்த்து.
37:161   فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ
37:161ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும்.
37:162   مَا أَنتُمْ عَلَيْهِ بِفَاتِنِينَ
37:162(எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது.
37:163   إِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيمِ
37:163நரகைச் சென்றடைபவர்களைத் தவிர.
37:164   وَمَا مِنَّا إِلَّا لَهُ مَقَامٌ مَّعْلُومٌ
37:164(மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்:) “குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை.”
37:165   وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ
37:165“நிச்சயமாக, நாங்கள் (அல்லாஹ்வின் ஏவலை எதிர்பார்த்து) அணிவகுத்தவர்களாகவே (நிற்கின்றோம்).
37:166   وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ
37:166“மேலும், நிச்சயமாக நாங்கள் (அல்லாஹ்வைத் துதி செய்து) தஸ்பீஹு செய்பவர்களாக இருக்கிறோம்.”
37:167   وَإِن كَانُوا لَيَقُولُونَ
37:167(நபியே! மக்காவாசிகள் முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்:
37:168   لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًا مِّنَ الْأَوَّلِينَ
37:168“முன்னோர்களிடமிருந்து, (எங்களுக்கு இறை நினைவூட்டும்) ஏதேனும் ஒரு வேதத்தை நாங்கள் பெற்றிருந்தால் -
37:169   لَكُنَّا عِبَادَ اللَّهِ الْمُخْلَصِينَ
37:169“அல்லாஹ்வுடைய தூய அடியார்களாக நாங்கள் நிச்சயமாக ஆகியிருப்போம்” என்று.
37:170   فَكَفَرُوا بِهِ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ
37:170ஆனால் (திருக் குர்ஆன் வந்தபோது) அவர்கள் அதை நிராகரிக்கிறார்கள் - (இதன் பலனை) விரைவிலேயே அவர்கள் அறிந்து கொள்வார்கள்!
37:171   وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِينَ
37:171தூதர்களாகிய நம் அடியார்களிடம், முன்னரே திடமாக நம்வாக்குச் சென்றிருக்கிறது.
37:172   إِنَّهُمْ لَهُمُ الْمَنصُورُونَ
37:172(அதாவது) நிச்சயமாக அவர்கள் உதவி செய்யப்படுவார்கள் -
37:173   وَإِنَّ جُندَنَا لَهُمُ الْغَالِبُونَ
37:173மேலும், நம் படைகளே நிச்சயமாக அவர்களே வெற்றி பெறுவார்கள்.
37:174   فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ
37:174(ஆகவே, நபியே!) சிறிது காலம் வரையில் நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக!
37:175   وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ
37:175(அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப்போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
37:176   أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
37:176நம்(மிடமிருந்து வரும்) வேதனைக்காகவா அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
37:177   فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ فَسَاءَ صَبَاحُ الْمُنذَرِينَ
37:177(அவ்வேதனை) அவர்களுடைய முற்றத்தில் இறங்கும்போது அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட அவர்களின் விடியல் மிகக் கெட்டதாக இருக்கும்.
37:178   وَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ
37:178ஆகவே, சிறிது காலம் வரை நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக.
37:179   وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ
37:179(அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப் போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
37:180   سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ
37:180அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.
37:181   وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ
37:181மேலும் முர்ஸல்(களான அவன் தூதர்)கள் மீது ஸலாம் உண்டாவதாக.
37:182   وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
37:182வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் (இன்னும் புகழ் அனைத்தும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகும்).

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505