dailyvideo


ஸூரத்துல் காஷியா


ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்)
மக்கீ, வசனங்கள்: 26

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
88:1    هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ
88:1சூழ்ந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
88:2   وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ
88:2அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
88:3   عَامِلَةٌ نَّاصِبَةٌ
88:3அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
88:4   تَصْلَىٰ نَارًا حَامِيَةً
88:4கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
88:5   تُسْقَىٰ مِنْ عَيْنٍ آنِيَةٍ
88:5கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
88:6   لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ
88:6அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
88:7   لَّا يُسْمِنُ وَلَا يُغْنِي مِن جُوعٍ
88:7அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது; அன்றியும் பசியையும் தணிக்காது.
88:8   وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ
88:8அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
88:9   لِّسَعْيِهَا رَاضِيَةٌ
88:9தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
88:10   فِي جَنَّةٍ عَالِيَةٍ
88:10உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
88:11   لَّا تَسْمَعُ فِيهَا لَاغِيَةً
88:11அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
88:12   فِيهَا عَيْنٌ جَارِيَةٌ
88:12அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
88:13   فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ
88:13அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
88:14   وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ
88:14(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
88:15   وَنَمَارِقُ مَصْفُوفَةٌ
88:15மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
88:16   وَزَرَابِيُّ مَبْثُوثَةٌ
88:16விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
88:17   أَفَلَا يَنظُرُونَ إِلَى الْإِبِلِ كَيْفَ خُلِقَتْ
88:17(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
88:18   وَإِلَى السَّمَاءِ كَيْفَ رُفِعَتْ
88:18மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
88:19   وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
88:19இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
88:20   وَإِلَى الْأَرْضِ كَيْفَ سُطِحَتْ
88:20இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
88:21   فَذَكِّرْ إِنَّمَا أَنتَ مُذَكِّرٌ
88:21ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக; நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
88:22   لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ
88:22அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
88:23   إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ
88:23ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
88:24   فَيُعَذِّبُهُ اللَّهُ الْعَذَابَ الْأَكْبَرَ
88:24அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
88:25   إِنَّ إِلَيْنَا إِيَابَهُمْ
88:25நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
88:26   ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم
88:26பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.

Recent Entries

Recent Comments

Photo Gallery

designer by MOHAMED ALAUDEEN 9789070505