ஸூரத்துல் ஃபலக்
ஸூரத்துல் ஃபலக்(அதிகாலை)
மக்கீ, வசனங்கள்: 5
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
மக்கீ, வசனங்கள்: 5
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
113:1 قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
113:1. (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
113:2 مِن شَرِّ مَا خَلَقَ
113:2. அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
113:3 وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
113:3. இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
113:4 وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
113:4. இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
113:5 وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
113:5. பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).