ஸூரத்துல் லஹப்
ஸூரத்துல் லஹப்(ஜுவாலை)
மக்கீ, வசனங்கள்: 5
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
மக்கீ, வசனங்கள்: 5
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
111:1 تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
111:1. அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.
111:2 مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
111:2. அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
111:3 سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
111:3. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
111:4 وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
111:4. விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
111:5 فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ
111:5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).